இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதனால் அந்த நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கவும் தயார் நிலையில் இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை தெற்கு 1, தெற்கு 2, வடக்கு, மையப்பகுதி, மேற்கு என சென்னையின் அனைத்து பகுதிகள் மற்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மக்களும் தொடர்பு கொள்ள உதவி ஆணையாளர்களின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த எண்களில் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
0 கருத்துகள்